Friday, February 26, 2010

த‌மிழ் விடு தூது

என் த‌மிழ் ந‌ண்ப‌ ந‌ண்பிக‌ளுக்கு,

வ‌ண‌க்க‌ம்.
ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌வே த‌மிழில் ஏதேனும் எழுத‌ வேண்டும் என்கிற‌ எண்ண‌ம் என‌க்குள் இருந்து கொண்டே இருந்த‌து. 17 வ‌ருட‌ங்க‌ள் த‌மிழ் வ‌ழிப் ப‌யின்ற‌தில் என‌க்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு. ஆனால் க‌ல்லூரியில் மெல்ல‌த் தேய்ந்த‌ த‌மிழுட‌னான‌ தொட‌ர்பு ப‌‌ணியிட‌ம் பெய‌ர்ந்த‌தும் முழுதாய் அறுந்த‌து. க‌ணிப்பொறி வாழ்க்கையில் எழுதுவ‌து என்ப‌தே எப்போதோ என்று ஆகிவிட‌, த‌மிழில் எழுதுத‌ல் சாத்திய‌ம‌ற்றுப் போன‌து.

இப்போது அத‌ற்க்கு வாய்ப்பு கிடைத்த‌தில் ம‌கிழ்ச்சி. வித்தியாச‌மான‌ சிந்த‌னைக‌ளை எழுத‌ வேண்டுமென்ற‌ ஆசை. என் ப‌ள்ளி நாட்க‌ளில் எழுதிய‌ க‌தை க‌விதைக‌ளையும் மென்வ‌டிவ‌மாக்கிப் ப‌டைப்ப‌தாய் உத்தேச‌ம். பிள்ளையார் சுழியாய் முத‌லில் ஒரு குறுங்க‌தை.

உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ஒரே ஒரு வ‌ரியாக‌ இருந்த்தாலும் என்னை உற்சாக‌ப் ப‌டுத்த‌வோ அல்ல‌து திருத்திக் கொள்ள‌வோ அது உத‌வுமேயானால் உங்க‌ளுக்கு என் ந‌ன்றிக‌ள் எப்போதும்.

இனி நீங்க‌ளும் என் ப‌திப்புக‌ளும்.

No comments:

Post a Comment